Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

vinoth

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (08:56 IST)
ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை எடுத்து சமீபத்தில் ரிலீஸ் செய்தார் இயக்குனர் கோகுல். அந்த படம் சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் படம் அடுத்த கட்டத்தை நோக்கி இன்னும் நகரவில்லை. இந்நிலையில் இந்த பட உருவாக்கத்தில் இயக்குனர் கோகுலுக்கும், நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தில் இருந்து கோகுல் வெளியேறிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் விஷ்ணு விஷால் வேறொரு இயக்குனரை வைத்து படத்தை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?