Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் எஸ்.பி.பி.க்கு இளையராஜா பாடிய இறுதி அஞ்சலி பாடல்

பாடகர் எஸ்.பி.பி.க்கு இளையராஜா பாடிய இறுதி அஞ்சலி பாடல்
, சனி, 26 செப்டம்பர் 2020 (11:15 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.  

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது.   அங்கு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருக்கும்.

அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை. நாடு முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா இறுதி அஞ்சலி பாடல் பாடி மன வருத்தத்துடன் தன் நண்பனை வழி அனுப்பி வைத்துள்ளார். உருக்கமான இந்த பாடலை கேட்டு அனைவரும் மனமுடைந்துவிட்டனர். இதோ அந்த பாடல்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன் – எஸ் பி பிக்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்!