Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.பி.பி உடல் இன்று இரவே அடக்கம் செய்யப்படுகிறது!

Advertiesment
SBP
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:54 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.

அவருடைய மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். மனிதர்களின் மன நோய்க்கு மருந்தாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவை இசை பிரியர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் சற்றுமுன் அந்த தகவலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவே மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது அந்த மாதிரி படம் இல்ல… மீண்டும் பார்ட் வேற வருதா? மம்மூட்டி சம்மதத்துக்காக வெயிட்டிங்!