Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளையராஜாவும் ரஹ்மானும்… அமைச்சர் அறிவிப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளையராஜாவும் ரஹ்மானும்… அமைச்சர் அறிவிப்பு!
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:30 IST)
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் போட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடக்க இருந்த நிலையில் போர் காரணமாக மாற்றப்பட்டது, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கான அனுமதி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் “சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கும் என்றும் நிகழ்ச்சியின் இறுதியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டு தடைவிதித்த ஆஸ்கர் அகாடெமி… வில் ஸ்மித்தின் பதில்!