Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டு தடைவிதித்த ஆஸ்கர் அகாடெமி… வில் ஸ்மித்தின் பதில்!

10 ஆண்டு தடைவிதித்த ஆஸ்கர் அகாடெமி… வில் ஸ்மித்தின் பதில்!
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:24 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் அகாடமி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.

விழா மேடைக்கு சென்ற தொகுப்பாளரை தாக்கியதால் இந்த நடவடிக்கை என்றும் அகாடமி விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாக தற்போது வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது சம்மந்தமாக அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

 

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் பாராட்டிய லேட்டஸ்ட் தமிழ்ப்படம்… வைரலாகும் வாழ்த்து!