Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படம் ரிலீஸாகும் போது என் படம் ரிலிஸாக வேண்டும்… இயக்குனர் ஹரியின் சபதம்!

சூர்யா படம் ரிலீஸாகும் போது என் படம் ரிலிஸாக வேண்டும்… இயக்குனர் ஹரியின் சபதம்!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:56 IST)
இயக்குனர் ஹரி இயக்கும் யானை படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகும் நாளில் ரிலிஸ் செய்யவேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அருண்விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்கள் இணையதளங்களில் ஸ்தம்பித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முதலில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் அருவா என்ற பெயரில் உருவாக இருந்தது. ஆனால் சூர்யா மற்றும் ஹரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கூட்டணி உடைந்தது. இந்நிலையில் இப்போது ஹரி தன்னை நிரூபிக்கும் விதமாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் அன்று தன் படமான யானை வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாகியுள்ளாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுக்கு போன் போட்ட கதாநாயகர்கள்!