Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்பட்டா கதை என்னுடையது இல்லை! – கோபி நயினார் விளக்கம்!

சார்பட்டா கதை என்னுடையது இல்லை! – கோபி நயினார் விளக்கம்!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:28 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா கதை தன்னுடையது அல்ல என இயக்குனர் கோபி நயினார் விளக்க அளித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. 1980களில் நடப்பது போன்ற இந்த கதையானது குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பட்டா கதை அறம் பட இயக்குனருடையது என்று வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது.

இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள கோபி நயினார் “குத்துச்சண்டையை மையமாக கொண்டு ஆயிரம் படங்கள் எடுக்கலாம். சார்பட்டா திரைப்படம் எனது கதையல்ல” என கூறியுள்ளார்.

முன்னதாக பா.ரஞ்சித் தாராவியை மையமாக கொண்டு இயக்கிய காலா மற்றும் பழங்குடி தலைவரான பிர்சா முண்டா குறித்து எடுக்க திட்டமிட்ட திரைப்படமும் கோபி நயினார் திட்டமிட்டவைதான் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி...ரசிகர்கள், அதிர்ச்சி... ராதிகா, வரலட்சுமி டுவீட்