கடந்த வாரம் நடந்த தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் சிவராஜ் குமாரிடம் என் குடும்பத்தில் அவர் ஒருவர். கர்நாடகாவில் இருக்கும் எனது குடும்பம் அவர். தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது. அதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்” என்று பேசினார்.
இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை உருவாக்கி சர்ச்சைகளைக் கிளப்பியது. தனது வார்த்தைகளுக்காகக் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக தக்லைஃப் வெளியீடு கர்நாடக மாநிலத்தில் சிக்கல் ஆனது. இதை அடுத்து, கமல்ஹாசன் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றமும் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என சொல்ல, கமல் “நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டிருப்பேன். தவறாகப் புரிந்துகொண்டதற்கு எதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்” என மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் கமல் மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று தமிழகத்தில் இருந்து பெரிய அளவில் அவருக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்தன.
இப்போது கர்நாடகா தவிர மற்ற இடங்களில் படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இன்று கோயம்புத்தூர் அர்ச்சனா தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் கமலுக்கு ஆதரவாக மன்னிப்புக் கேட்க முடியாது. We stand with kamalhaasan” என்ற வாசகத்தோடு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.