Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஆண்டுகளாக சிறையில் இருந்த பிரபல நடிகருக்கு ஜாமீன்

ajaz khan
, வெள்ளி, 19 மே 2023 (18:42 IST)
போதை வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த அஜாஸ் கான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த நடிகர் அஜாஸ் கான். இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பத் திரைப்படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர், கியா ஹோகா நிம்மோ கா, பாலிவுட் கிளப், ரஹே தேரா ஆஷிர்வாத் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

டிவி தொடர்கள் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் அஜாஸ்கான், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அப்போது, அவருக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை மீட்டதாகக் தகவல் வெளியானது.

இவ்வழக்கில் ஆர்தர் ரோடு சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்த அஜாஸ் கான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிதி சங்கரை புறக்கணிக்கும் முன்னணி ஹீரோக்கள் - வாய்விட்டு மாட்டிக்கிட்டியேமா!