Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (20:50 IST)
நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன் நாத் ஆகிய இருவரிடமும் அ மலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி  நடிகர் விஜயதேவரகொண்டா. இவர் நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லைகர்.

இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கொடுத்துள்ளாதாக  கூறப்படுகிறது.

இப்படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தெலுங்கு விநியோகஸ்தர்கள்  போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  இயக்குனர் பூரி ஜெகன் நாத் மற்றும் நடிகரி சார்மி ஆகிய இருவரையும் நேரில் வந்து ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். இவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லைகர் படத்திற்கு கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இவர்கள் இருவரிடமும் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments