Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…. பிரியங்கா சோப்ரா கேள்வி!

நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…. பிரியங்கா சோப்ரா கேள்வி!
, சனி, 19 நவம்பர் 2022 (16:12 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ஆன பின்னர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலம் ஆன அவர், அடுத்து அமெரிக்காவிலேயே வசிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், பேசும்போது “நடிகர் நடிகைகள் வேறு யாரோ சொல்வதை பேசுபவர்கள். அல்லது உதட்டை அசைப்பவர்கள்.  அவர்கள் அதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு சயின்ஸ்பிக்‌ஷன் கதை சொல்லியுள்ள இளம் இயக்குனர்!