ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான லோகா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் டோம்னிக் எழுதி இயக்கியுள்ள லோகா திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை துல்கர் சல்மான் தன்னுடைய wayfrayers films நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் மோகன்லாலின் ஹ்ருத்யபூர்வம் திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தற்போது 100க்கும் மேற்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படம் 7 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் வெற்றிச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் துல்கர் சல்மான் “லோகா படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை நான் படத்தில் பணியாற்றிய அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஏனென்றால் அவர்கள் இந்த படத்துக்காகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். அது அவர்களுக்குதான் சேரவேண்டும். இந்த பாகத்தில் மட்டும் இல்லாமல் இதன் அடுத்தடுத்த பாகங்களிலும் இப்படியே தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.