Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என கூறிய இயக்குநர் கைது !

மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என கூறிய இயக்குநர் கைது !
, வியாழன், 5 மே 2022 (18:35 IST)
நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் சசிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகை மஞ்ச்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல்குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவான படம் அசுரன். இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியர். இவர் ஏராளமான படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்,  நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான  மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து அதில், கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில்,   நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் சசிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் புகாரில், தன் பெயருக்கு கேடு விளைவிக்கு வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் அவர்குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த எர்ணாகுளம் காவல்துறை சணால் குமாரை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ டூடூடூ வீடியோ பாடல்