Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் தெலுங்கு உரிமத்தைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

பொன்னியின் செல்வன் தெலுங்கு உரிமத்தைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!
, சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:34 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன. நேற்று இரண்டாவது பாடலான சோழா சோழா பாடல் ஐதராபாத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய்யின் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரித்து வருபவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கிய திருச்சிற்றம்பலம் நாயகி!