தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் முதல் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டரில் ஒரு ரசிகர், "குபேரா திரைப்படம் தனுஷின் அபாரமான, அவரது சினிமா வாழ்க்கையின் சிறந்த நடிப்பால் இதயங்களை வென்றுள்ளது. படத்தின் நீளம் ஒரு சிறிய குறைபாடாக இருந்தாலும், பல மறக்க முடியாத தருணங்களை கொண்டுள்ளது. இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம்!" என்று பாராட்டியுள்ளார்.
மற்றொருவர், "தனுஷின் நடிப்பு அசத்தல்! குபேரா பிளாக்பஸ்டர். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!" என்று குறிப்பிட்டார்.
இன்னொரு ரசிகர், "குபேரா சமீபத்திய படங்களில் சிறந்தது. சேகர் கம்முலாவின் இயக்கம், தனுஷின் நடிப்பு, நாகார்ஜுனாவின் பிரம்மாண்டம், டிஎஸ்பி-யின் இசை என ஒவ்வொன்றும் பணத்திற்கு மதிப்புள்ளது. ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை," என்று புகழ்ந்தார்.
படத்தின் இரண்டாம் பாதியை ஒரு ட்விட்டர் பயனர் 'அபாரமானது' என்று வர்ணித்துள்ளார். இருப்பினும், படத்தின் கிளைமாக்ஸ் சற்று தடுமாறியதாக அவர் சுட்டிக்காட்டினார். "கடைசி 10 நிமிடங்கள் தவிர, குபேரா படத்தின் இரண்டாம் பாதி அபாரமாக உள்ளது. கிளைமாக்ஸ் சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கு முன் வந்த காட்சிகள் உணர்ச்சிப் பெருக்குடன் மனதில் ஆழமாகப் பதிகின்றன," என்று அவர் கருத்து தெரிவித்தார்.