Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

vinoth

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:48 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ராயன் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இந்த பாடலில் பிரியங்கா மோகன் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிதான் என் துரோணாச்சாரியார்… கூலி படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் உபேந்திரா நெகிழ்ச்சி!