Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் முகாமிட்ட தனுஷ் அண்ட் கோ!

மும்பையில் முகாமிட்ட தனுஷ் அண்ட் கோ!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (16:34 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி நடந்தன.

ஆனால் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக மூன்று மாதம் அமெரிக்காவில் முகாமிட்டார். அதை முடித்துவிட்டு இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள தனுஷ் இன்று முதல் கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் இறுதிக் கட்ட படப்பிடிப்போடு மொத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிய உள்ளது. அதன் பின்னர் செல்வராகவன் படத்தில் நடிக்க தனுஷ் செல்ல உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன இமான் பேரக் காணோம்… அண்ணாத்த போஸ்டரால் குழம்பிய ரசிகர்கள்!