Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:42 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் கடைசி கட்டப் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இதனால் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஞ்சியுள்ள காட்சிகளை இம்மாத மத்தியில் படக்குழு படமாக்க மீண்டும் தேனி செல்ல உள்ளது. இதனுடன் இந்தியாவில் எடுக்கும் காட்சிகள் முழுவதுமாக நிறைவு பெறவுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

மலையாள சினிமாவில் அதிக வசூல்… மஞ்சும்மெள் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்!

ஆயிரத்தில் ஒருவன் 2 வில் தனுஷ்& கார்த்தி… இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments