Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தள்ளிப் போகும் ‘சிம்பு 48’… அதிருப்தியில் இயக்குனர் தேசிங் பெரியசாமி!

மீண்டும் தள்ளிப் போகும் ‘சிம்பு 48’… அதிருப்தியில் இயக்குனர் தேசிங் பெரியசாமி!

vinoth

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:37 IST)
சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு கமல்ஹாசனின் தக்லைஃப் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட் காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்த சிம்பு தானே அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஆட்மென் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த படத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்திவிட்டாராம் சிம்பு. இப்போது அவர் ‘2018’ படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் தேசிங் பெரியசாமி, அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் கங்குவா டீசர் எப்போது?... வெளியான தகவல்!