Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழ் பெண்ணாக நடிக்கும் பாலிவுட் நடிகை..!!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (19:01 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படூகோன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார்.

பிரபல நடிகை தீபிகா படுகோன் “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் மீனலோச்சினி என்ற கதாப்பாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார். இதன் பிறகு தற்போது ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படம் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் வெளிவந்த “சாட்டே பே சட்டா” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். சாத்தே பிசாத் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் ஹேமா மாலினி தமிழ் பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது ரீமேக் செய்யப்படும் திரைப்படத்தில் ஹேமா மாலினியின் கதாப்பாத்திரத்திற்கு தீபிகா படுகோன் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஃபாராக் கான் முடிவு செய்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments