Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ளே ஆஃப் போகலைன்னாலும் நாங்கதான் கிங்..! – சொல்லி அடித்த சிஎஸ்கே!

ப்ளே ஆஃப் போகலைன்னாலும் நாங்கதான் கிங்..! – சொல்லி அடித்த சிஎஸ்கே!
, செவ்வாய், 24 மே 2022 (18:02 IST)
ஐபிஎல் தொடரில் நடப்பாண்டில் சிஎஸ்கே ப்ளே ஆப் தகுதி பெறாவிட்டாலும் ப்ளே ஆப் சாதனைகள் பலவற்றையும் சென்னை அணியே தக்கவைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் லீக் ஆட்டங்கள் முடிந்து ப்ளே ஆப் சுற்று தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஐபிஎல்லில் ஜாம்பவான் அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்று அணிகளுமே தகுதி பெறவில்லை.

ஆனாலும் இதுவரை அதிக முறை ப்ளே ஆஃப் சென்றுள்ள சென்னை அணி பல்வேறு சாதனைகளை கையில் வைத்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் சென்னை அணி வீரர்களே உள்ளனர். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னாவும், அடுத்து தோனியும், அடுத்து வாட்சன், ஹஸ்ஸி, முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். அதேபோல அதிக விக்கெட்டுகளை ப்ளே ஆஃபில் வீழ்த்தியதில் ட்வெய்ன் ப்ராவோ முதலிடத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி பாணியில் சூர்யா நடிக்கும் இரண்டு பாக திரைப்படம்!