Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன்: தோனி

அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன்: தோனி
, வெள்ளி, 20 மே 2022 (20:20 IST)
அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன்: தோனி
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற உடன் பேட்டிங்கை தேர்வு செய்த தோனி, அதன்பின் பேட்டி அளித்தார். அப்போது அடுத்த சீசனில் விளையாடுகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனியின் நிச்சயமாக, ஏனெனில் சென்னைக்கு நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது
 
சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையில் விடை பெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது என்று கூறியுள்ளார் 
 
ஒருவேளை முதல் போட்டியில் மட்டும் சென்னையில் விளையாடி விட்டு அதன் பிறகு ஓய்வு பெறுவாரா? அல்லது அடுத்த சீசன் முழுவதும் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் செய்ய முடிவு!