தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ஆரம்பித்த இவரின் இசைப் பயணம் தற்போது ஹாலிவுட் சினிமா வரை விரிந்துள்ளது.
இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமத்தப் பாடல் ஒன்று தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் ரஹ்மான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்வீர ராஜா வீரா என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
அந்த பாடல் சிவா ஸ்துதி பாடலை நகலெடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி ஏ ஆர் ரஹ்மான் நீதிமன்றத்தில் 2 கோடி ரூபாயை வைப்பு நிதியாகக் கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.