Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யுடன் மோத வேண்டாம்.. எஸ்கே கெஞ்சியும் கேட்காத பராசக்தி குழு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனை..!

Advertiesment
விஜய்

Siva

, வெள்ளி, 30 மே 2025 (09:25 IST)
விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக விஜய் படம் ரிலீஸானால், அந்த தேதியில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் ஆகாது. ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் அதே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
‘பராசக்தி’ ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன், பராசக்தி தயாரிப்பாளருடன்  "விஜய்யுடன் மோத வேண்டாம்; அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவரும் என் மீது பாசம் வைத்திருக்கிறார்," என்று சிவகார்த்திகேயன் சொல்லியும் கேட்காமல் ‘பராசக்தி’ படக்குழுவினர், அவருக்கே தெரியாமல் ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.
 
ஆனால் தற்போது, பராசக்தி படமே மொத்தத்தில் ரிலீஸ் ஆக விடாமல், “கடவுள் தண்டனை கொடுத்துவிட்டார்” என்றும், தற்போது தயாரிப்பாளரே தலைமறைவாக இருப்பதால், இந்த படம் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
மொத்தத்தில், "கெடுவான் கேடு நினைப்பான்" என்பது போல, விஜய்யை ஒழித்துக் கட்ட நினைப்பவர்கள் தான் தற்போது ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி ஒருவன் 2 என்னாச்சு?... சிம்புவோடு கைகோர்க்கும் மோகன் ராஜா!