Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?- சின்மயி விளக்கம்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (15:50 IST)
திருமண விழாவில் வைரமுத்து காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

 
‘மீ டூ' ஹேஷ்டேக் இயக்கம் மூலம் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் பலரும் “உங்களுடைய திருமணத்திற்கு வந்த வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்” என்று  கேள்வி எழுப்பி வந்தார்கள். 
 
இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் சின்மயி விளக்கம் அளித்தார்.
 
எனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக் கொண்டே பத்திரிக்கை வைத்தேன்.
 
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது. இவ்வாறு சின்மயி தனது பேட்டியின் போது விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்