Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசுக்கு எதிராக விஷாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழக அரசுக்கு எதிராக விஷாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
, புதன், 12 பிப்ரவரி 2020 (12:54 IST)
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்தது போல் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் என். சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது
 
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு குறித்து ஒரு அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது 
 
இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் நான்கு மாதங்களுக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு அதன் நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் மீண்டும் நடைபெறும்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிக்க வருகிறார் ‘சிவராத்திரி’ புகழ் ரூபிணி !