பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பத்து நாட்களில் உலகளவில் சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் பைசன் கேரளாவிலும் பெரியளவில் கலக்கி வருகிறது. முதல் வாரத்தில் சராசரியான வசூலைப் பெற்ற பைசன் இரண்டாம் வாரத்தில் வசூல் அதிகமாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான பைசன் அப்பகுதி ரசிகர்களை கவரவில்லை என்று சொல்லப்படுகிறது. அங்கு சுத்தமாக படத்துக்கு ஓப்பனிங் இல்லை என்று சொல்லப்படுகிறது.