Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் 27 வருட வாழ்க்கையில் கற்றதை விட…. மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்த துருவ்!

Advertiesment
மாரி செல்வராஜ்

vinoth

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (12:37 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது பேசிய துருவ் விக்ரம் “என் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியை நான் அனுபவித்தது இல்லை. சினிமாவுக்காக நான் என்னவெல்லாம் கொடுக்கத் தயாராக உள்ளேனோ அதையெல்லாம் கிட்டான் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் மாரி சார். என் 27 வருட வாழ்க்கையில் கற்ற பாடத்தை விட அவருடன் இருந்த ஒரு வருடத்தில் நான் கற்ற பாடம் அதிகம். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த கேள்வியைக் கேட்டு துருவ்வின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்… பசுபதி ஆதங்கம்!