Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவின் படத்திற்கு தடை... படக்குழுவினர் அப்செட்....

Advertiesment
maanaasu
, திங்கள், 21 டிசம்பர் 2020 (21:00 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது வேகத்தை மழை தடுத்து நிறுத்தியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஏற்கனவே வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம்  மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

அரசியல் களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படப்பிடிப்பு புதுச்சேரியில் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கும்போது, புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் படக்குழுவினர் சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த குஷ்பு-மீனா: வைரலாகும் புகைப்படம்!