Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈஸ்வரன் படத்தின் ரிலீஸில் புது மாற்றம் – கடைசி நேரத்தில் கைவிட்ட சிம்பு!

ஈஸ்வரன் படத்தின் ரிலீஸில் புது மாற்றம் – கடைசி நேரத்தில் கைவிட்ட சிம்பு!
, புதன், 9 டிசம்பர் 2020 (10:40 IST)
ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் விலகிக் கொண்டுள்ளது.

சிம்பு, நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்துள்ள சுசீந்தரன் பொங்கல் வெளியீடாக கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் பெரும் கவனததை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் இப்போது வேகமாக நடந்து வரும் நிலையில் திடீரென ரிலீஸில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை ஆரம்பிக்கும் போதே தன்னுடைய சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ரிலிஸ் செய்வதாக சொல்லிதான் சிம்பு ஆரம்பித்தார். ஆனால் இப்போது அதில் இருந்து விலகியுள்ளாராம் சிம்பு. இதனால் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் எஸ்பிபி பெயரில் வனம் – சிறுதுளி அமைப்பினரின் முன்னெடுப்பு!