தன்னுடைய 74 ஆவது வயதிலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தன்னுடைய வேடம் மிகவும் சிறியதுதான் என்பதால் பாலைய்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் தற்போது பஹத் பாசிலை அந்த வேடத்தில் நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.