சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன் பிறகு அவர் நடிப்பில் இருந்து முழு ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பெரும் நடிகர்களும் இணைந்து நடிக்கவிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை கமல்ஹாசனே தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார்.
இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ரஜினியின் திரை வாழ்க்கையின் நிறைவாக இருக்கும் என்ற செய்தி, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் அளித்துள்ளது.