Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

Advertiesment
பொன்னியின் செல்வன்

vinoth

, திங்கள், 9 ஜூன் 2025 (08:13 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது.

இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் அக்டோபர் மாதம் அந்தப் படத்தை ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். ஆனால் இந்த இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரி ரிலீஸ் செய்யாமல் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே படமாக ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!