Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைப்புலி தாணுவையே தலைசுற்ற வைத்த அட்லி- அப்படி என்ன செய்தார்?

கலைப்புலி தாணுவையே தலைசுற்ற வைத்த அட்லி- அப்படி என்ன செய்தார்?
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:59 IST)
இயக்குனர் அட்லி தன் படத்தின் கதை விவாதத்துக்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவிழுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் அட்லி தனது படத்தின் பட்ஜெட்டை அதிகரித்து தயாரிப்பாளர்கள் தலையில் துண்டைப் போட வைப்பதில் வல்லவர். ஆனால் அவர் படங்கள் ஹிட் ஆவதாலும் விஜய் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாலும் அவரது சம்பளம் பல கோடிகளில் ஏறியுள்ளது.

இந்நிலையில் விஜய்யுடன் அவர் இணைந்த முதல் படத்தின் போது தயாரிப்பாளருக்கு அவர் அளித்த அதிர்ச்சி வைத்தியம் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் தெறி படத்தினை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க இருந்த நிலையில் அதைக் கலைப்புலி தாணு கைப்பற்றினார். அப்போது முன்னதாக செலவு செய்த தயாரிப்பாளருக்கு பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என கூறி 95 லட்ச ரூபாய் வரை கேட்டு வாங்கியுள்ளாராம்.

இந்த தொகையைக் கேட்ட தாணுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு அன்று முதல் படத்தின் பட்ஜெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய முன்னணி ஓடிடி நிறுவணம்!