Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யன் கான் பிரச்சனைக்குப் பின் தொடங்கும் ஷாருக் கான் திரைப்படம்!

ஆர்யன் கான் பிரச்சனைக்குப் பின் தொடங்கும் ஷாருக் கான் திரைப்படம்!
, வியாழன், 18 நவம்பர் 2021 (17:11 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது.  படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதில் ஷாருக் கான் மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதே நிச்சயமாக அட்லி உட்பட யாருக்கும் தெரியவில்லையாம். இதனால் அந்தப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என இப்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆர்யன் கான் பிரச்சனை இப்போது சுமூக நிலை அடைந்து அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் அட்லி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் அதில் ஷாருக் கான் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய் பீம் சர்ச்சை முடிந்துவிட்டது… கடம்பூர் ராஜு பதில்!