Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி பாகிஸ்தானில்… கலந்துகொள்ளுமா இந்தியா?

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி பாகிஸ்தானில்… கலந்துகொள்ளுமா இந்தியா?
, வியாழன், 18 நவம்பர் 2021 (16:05 IST)
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

ஐசிசி நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலௌயில் அடுத்து 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள ஐசிசி தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு அந்த தொடர் நடக்க உள்ள நாடுகளின் பெயர்களையும் அறிவித்துள்ளது. இதில் 3 தொடர்களை இந்தியா மற்ற நாடுகளோடு இணைந்து நடத்துகிறது.

இதில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிரோபி தொடரை பாகிஸ்தானில் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களால் இந்தியா கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதில்லை. இதனால் இந்த தொடரில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அப்போதுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்றார்போல முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி டி 20 தரவரிசையில் இந்திய பவுலர்களுக்கு இடமில்லை!