Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100ஐ விட 50 தான் சில சமயத்தில் சிறந்தது! – திரையரங்க அனுமதி குறித்து அரவிந்த் சாமி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:30 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அரவிந்த்சாமி ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் பட வெளியீட்டுற்கு திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த்சாமி “சில நேரங்களில் 50% சதவீதம் என்பது 100% என்பதை விட சிறந்ததாகவே இருக்கும். அவற்றில் இதுவும் ஒன்று” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments