தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. பாகுபலி படத்துக்குப் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகமாகி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.
கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் காத்தி திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.
அனுஷ்கா, கிரிஷ் கூட்டணியில் ஏற்கனவே வேதம் என்ற ஹிட் படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் கிரிஷ் “வேதம் படத்தில் அனுஷ்காவின் கவர்ச்சியான போஸ்டர் ஐதராபாத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த போஸ்டரைப் பார்த்துக் கொண்டு ஓட்டுனர்கள் வண்டியை ஒழுங்காக ஓட்டாமல் 40 விபத்துகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் பின்னர் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த போஸ்டரை நாங்கள் எடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.