Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் பயோபிக்கை இயக்க விரும்பவில்லை… அனுராக் காஷ்யப் சொல்லும் காரணம்!

Advertiesment
அனுராக் காஷ்யப்

vinoth

, புதன், 17 செப்டம்பர் 2025 (16:47 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.

சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் லியோ மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த ரைபிள் கிளப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அங்கே பெரியளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் விராட் கோலியின் பயோபிக்கை இணைக்க வாய்ப்பு வந்தால்  அதை ஏற்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாகப் பேசியுள்ள அனுராக் “கோலி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் ஹீரோவாக உள்ளார்.  கோலி மிகவும் அழகானவர் மற்றும் அன்பானவர். அவர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க வேண்டுமென்றால் நான் வேறொருவரைதான் கேட்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங் நடத்திய ஊருக்கு சாலை வசதி செய்து தந்த பா ரஞ்சித் படக்குழு!