கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இது விக்ரம் போன்ற ஒரு மாஸ் நடிகருக்கு சராசரிக்குக் கீழான வசூல்தான். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் நடிப்பில் மடோன் அஸ்வின் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஷ்வா தயாரிக்க இருந்தார். ஆனால் இந்த படத்தின் திரைக்கதை தனக்கே பிடிக்காததால் மீண்டும் திருத்தி எழுத நேரம் கேட்டுள்ளாராம். அதனால் தற்போது விக்ரம்மின் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து அது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.