Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டி இந்தியன் பட ரிலீஸுக்கு சிங்கப்பூரில் தடை! – படக்குழு மேல்முறையீடு!

ஆண்டி இந்தியன் பட ரிலீஸுக்கு சிங்கப்பூரில் தடை! – படக்குழு மேல்முறையீடு!
, சனி, 11 டிசம்பர் 2021 (08:51 IST)
ப்ளூசட்டை மாறன் எழுதி, இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். இவர் தற்போது ஆண்டி இந்தியன் என்ற படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் சிங்கப்பூரிலும் வெளியாக இருந்த நிலையில் படத்தில் மத அமைப்புகளை விமர்சிக்கும் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் இடம் பெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறுதணிக்கைக்காக படக்குழுவினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா ஆரம்பித்த புதிய தொழில்!