Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அஞ்சலி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (11:37 IST)
இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி.



கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அருண் குமார் இயக்குகிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ படங்களை இயக்கியவர் அருண் குமார். இந்த இரண்டு படங்களிலுமே விஜய் சேதுபதி தான் ஹீரோ. தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியைத்தான் இயக்குகிறார் அருண் குமார். மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. மலேசியா, தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘பாகுபலி 2’ படத்தை ரிலீஸ் செய்த கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments