Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவர் நடராஜன் மரணம் : சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா

கணவர் நடராஜன் மரணம் : சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா
, செவ்வாய், 20 மார்ச் 2018 (13:58 IST)
மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

 
சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, சில நிமிடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தார். அப்போது அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். 
 
நடராஜனின் இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. எனவே, பெங்களூரிலிருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக சசிகலா காரின் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு நடராஜனின் இறுதி சடங்கில் அவர் கலந்து கொள்கிறார். 
 
உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலா முதல் முறையாக பரோலில் வெளிவந்தார். தற்போது 2வது முறையாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை போலவே தற்போதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, யாரையும் சந்திக்கக் கூடாது என்கிற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர் நடராஜன் மரணம் : சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா