தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அனிருத் முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றுக்கு இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷான் நிகாம் நடிக்கும் பல்டி என்ற புதிய படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.