Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“விஜய்யை வைத்து நான் படம் தயாரித்தால்…” நடிகை அமலா பால் ஆசை

Advertiesment
amala paul
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:19 IST)
நடிகை அமலா பால் விஜய்யை வைத்து ஹாலிவுட் படமான கிராவிட்டி போல பிரம்மாண்டமாக படம் தயாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

இதற்கிடையில் 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமலா பால் தற்போது காடவர் என்ற திரைப்படத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “நடிகர் விஜய்யை வைத்து நான் படம் தயாரித்தால், அது ஹாலிவுட் படமான கிராவிட்டி போல பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லூசிபர் படத்தில் பிரபுதேவா… இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்ட வைரல் புகைப்படம்!