Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் அடுத்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளது இந்த நிறுவனம்தான்!

நயன்தாராவின் அடுத்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளது இந்த நிறுவனம்தான்!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:14 IST)
நயன்தாரா மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள கோல்டு திரைப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ளார்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் கோல்ட் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. பிரேமம் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படம் தமிழிலும் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து தற்போது கோல்டு படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கோல்ட் படத்தின் வெளிநாடுகளின் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் TRUTH GLOBAL FILMS நிறுவனம் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறையாக தொலைக்காட்சியில் ‘விக்ரம்’ திரைப்படம்…. தேதியோடு வெளியான அறிவிப்பு!