Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாக்டவுனில் அஜித்திடம் கதை சொல்லியுள்ள இயக்குனர் – விரைவில் அறிவிப்பு!

லாக்டவுனில் அஜித்திடம் கதை சொல்லியுள்ள இயக்குனர் – விரைவில் அறிவிப்பு!
, சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:23 IST)
லாக்டவுன் சமயத்தில் நடிகர் அஜித் இரு இயக்குனர்களிடம் கதை கேட்டு அதில் ஒருவரை கிட்டத்தட்ட ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்காக இரு தமிழ் இயக்குனர்களிடம் தன் வீட்டில் வைத்தே அவர் கதை கேட்டதாகவும், அதில் ஒரு இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அந்த இயக்குனர் யார், அந்த படத்தைத் தயாரிக்கப்போகும் தயாரிப்பாளர் யார் என்ற விவரம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடி பக்கம் ஒதுங்குகிறதா மூக்குத்தி அம்மன்? ஆர் ஜே பாலாஜி பேச்சுவார்த்தை!