Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஜா பட வாய்ப்பை இழந்தேன்.. . பின்னர் அழுது புலம்பினேன் – முன்னணி நடிகை ஓபண்டாக்!

ரோஜா பட வாய்ப்பை இழந்தேன்.. . பின்னர் அழுது புலம்பினேன் – முன்னணி நடிகை ஓபண்டாக்!
, வெள்ளி, 12 ஜூன் 2020 (09:18 IST)
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் வாய்ப்பை தான் இழந்ததாக நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாதானாம்.

இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம் காரணமாக இழந்துவிட்டாய். அப்போது நான் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அதனால் இந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். ’எப்படி ஒருவர் தேனைக் கொடுக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்வோமோ? அதுபோல’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிரிதிவிராஜ் படக்குழுவினர் ஒருவருக்கு கொரோனா!