Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவுக்கு அங்கிகரிக்கப்பட்ட மருந்து – ரஷ்யா பரிந்துரை!

கொரோனாவுக்கு அங்கிகரிக்கப்பட்ட மருந்து – ரஷ்யா பரிந்துரை!
, வெள்ளி, 12 ஜூன் 2020 (08:56 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து ஒன்றை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு என தனியான எந்த மருந்தும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. ஓவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாக ரஷ்யா பவிபுரவிர் (pavifarvir) என்ற மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம்தான் இந்த மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு மாததில் 60000 பேருக்கு அளிக்கும் அளவுக்கு இந்த மருந்து உற்பத்தி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த மருந்தை பெற 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா சிகிச்சை பெற்ற பாட்டி; கழிவறையில் பிணமாக கண்டெடுப்பு! – மருத்துவமனையின் அலட்சியம்!