Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த நடிகர் விஜய்… ரசிகர்கள் நெகிழ்ச்சி

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:36 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

அந்த வகையில் நடிகர் விஜய் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். 

அப்போது அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் புடைசூழ நடிகர் விஜய்யைப் பாதுக்காப்பாக வெளியேற உதவினர்.
அங்கு கூட்டத்தில் ஒரு ரசிகரின் செருப்பு கீழே தவறிவிட உடனே விஜய் அதைத் தனது கையால் எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments