Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த நடிகர் விஜய்… ரசிகர்கள் நெகிழ்ச்சி

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:36 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.  

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

அந்த வகையில் நடிகர் விஜய் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். 

அப்போது அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் புடைசூழ நடிகர் விஜய்யைப் பாதுக்காப்பாக வெளியேற உதவினர்.
அங்கு கூட்டத்தில் ஒரு ரசிகரின் செருப்பு கீழே தவறிவிட உடனே விஜய் அதைத் தனது கையால் எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments